இராமலிங்க அடிகள்
திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கிறான் – பண்ணில்
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.
– இராமலிங்க அடிகளார்.
ஆசிரியர் குறிப்பு:
இராமலிங்க அடிகளார் “திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்.
கடலூர் வட்டம் மருதூரில் பிறந்தவர்.
பெற்றோர்: இராமையா – சின்னம்மையார்
காலம்: 5.10.1823 – 30.01.1874
நூல்கள்:
ஜீவகாரூன்ய ஒழுக்கம்
மனுமுறை கண்ட வாசகம்
இவர் பாடல்கள் அனைத்தும் “திருவருட்பா” எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு:
சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
மத நல்லிணக்கத்திற்கு “சன்மார்க்க சங்கம்”, உணவளிக்க “அறச்சாலை”, அறிவு நெறி விளங்க “ஞான சபை” நிறுவினார்.
ஆறாம் வகுப்பு முதல் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்
தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App